Saturday, August 25, 2012

திருக்காதல்-Thirukkadal

திருக்காதல் Thirukkadal
திருவே! நினைக்காதல் கொண் டேனே - நினது திரு 
உருவே மறவாதிருந் தேனே - பல திசையில் 
தேடித் திரிந்திளைத் தேனே - நினக்கு மனம் 
வாடித் தினங்களைத் தேனே - அடி, நினது 
பருவம் பொறுத்திருந் தேனே - மிகவும், நம்பிக் 
கருவம் படைத்திருந் தேனே - இடை நடுவில் 
பையச் சதிகள்செய் தாயே - அதனிலுமென் 
மையல் வளர்தல் கண்டாயே - அமுதமழை 
பெய்யக் கடைக்கண்நல் காயே - நினதருளில் 
உய்யக் கருணைசெய் வாயே - பெருமைகொண்டு 
வையந் தழைக்கவைப் பேனே - அமரயுகஞ் 
செய்யத் துணிந்துநிற் பேனே - அடியெனது 
தேனே ! எனதிரு கண்ணே ! - எனையுகந்து 
தானே ! வருந் திருப் - பெண்ணே 

No comments:

Post a Comment