Friday, August 24, 2012

காளிக்கு ஸமர்ப்பணம்-Kalikku samarpanam

காளிக்கு ஸமர்ப்பணம் 

இந்த மெய்யும் கரணமும் பொறியும் 
இருபத் தேழு வருடங்கள் காத்தனன் 
வந்த னம்மடி பேரரு ளன்னாய்! 

வைர வீ! திறற் சாமுண்டி! காளி!
சிந்த னைதெளிந் தேனினி யுன்றன்
திருவ ருட்கென அர்ப்பணஞ் செய்தேன்
வந்தி ருந்து பலபய னாகும்
வகைதெ ரிந்துகொள் வாழி யடிநீ. 

No comments:

Post a Comment