காற்றை புகழ நம்மால் முடியாது
அவன் புகழ் தீராது
அவனை ரிஷிகள் "ப் ரத்யக்ஷம் ப்ரஹ்ம"என்று
போற்றுகிறார்கள் .
பிராணவாயுவைத் தொழுகின்றோம் .அவன்
நம்மைக் காத்திடுக.
அபாநனைத் தொழுகின்றோம்.அவன் நம்மைக் காக்க.
வ்யாநனைத் தொழுகின்றோம்.அவன் நம்மைக் காக்க
உதாநனைத் தொழுகின்றோம்.அவன் நம்மைக் காக்க
ஸமாநனைத் தொழுகின்றோம்.அவன் நம்மைக் காக்க
காற்றின் செயல்களையெல்லாம் பரவுகின்றோம்
உயிரை வணங்குகின்றோம்.
உயிர் வாழ்க.