Wednesday, August 15, 2012

21. கண்ணம்மா-என் காதலி-Kannamma en kaadali

21. கண்ணம்மா-என் காதலி

யோகம்
பாயு மொளி நீ யெனக்கு,பார்க்கும் விழி நானுனக்கு,

தோயும் மது நீ யெனக்கு,தும்பியடி நானுனக்கு.
வாயுரைக்க வருகுதில்லை,வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா! 1

வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு,புது வரிம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ
மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா! 2

வான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்கு,பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,
ஊனமறு நல்லழகே!ஊறு சுவையே!கண்ணம்மா! 3

வெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு;
பண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா! 4

வீசு கமழ் நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்கு,பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே!கனியே!அள்ளு சுவையே கண்ணம்மா! 5

காதலடி நீ யெனக்கு,காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு,வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா! 6

நல்லவுயிர் நீ யெனக்கு,நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு,சேமநிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே!எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லைநிகர் புன்னகையாய்!மோதுமின்பமே!கண்ணம்மா! 7

தாரையடி நீ யெனக்கு,தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு,வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய்ச் சமைந்தாய்!உள்ளமுதமே!கண்ணம்மா! 




http://mundasukavignar-bharathiar.blogspot.in/2012/08/payumoli-nanunakku-parkum-vizhi.html

wanted to know the meaning of certain lines in this poem.Though I am not a tamil scholar I have given themeaning to the best of knowledge.
1.தும்பி=தேனீ, கரும்பு   சூறை=கொள்ளை 
-
2.பூணும்=அணியும் வடம்=கயிறு,மாலை 
 புது வயிர  நானுனக்கு=புது வாழ்வளிப்பவர்
You type புது வயிர நானுனக்கு and you get the meaning

3.பாண்டம்=பாத்திரம் 
ஊனமறு =குறையற்ற

4.மேவு=fill up , நிரவு ; 2 . desire , love , விரும்பு ; 3 . make the ground even , level , சமனாக்கு ;  ; 5 . join , combin
பண்ணு=செய் , படை , உருவாக்கு 
 சுதி=சுருதி ; 2 . an instrument accompaniment to an air .

5.போதமுற்ற=போதம்= ஸ்மரணை,ஞாபகம்,consciousness 
நாதவடிவானவள்=நாதம்+வடிவு
நாதம்=குரல் உணர்ச்சி , நயம் 
வடிவு=தோற்றம் 

6.வீசு=தெளி
கமழ்=  yield a fragrant smell 

7.நல்லுயிர்  நாடியடி= உயிர்நாடி=நீ உயிர் என்றால் நான் நாடி 

8.தாரை=stream : தாரை, a star,கண்மணி(the pupil of the eye) , ,நீர்வீழ்ச்சி ,
நீர் ஊற்று ,a star , விண்மீன்
தண்மதி=நிலா (தண்மதி கண்ட ஆம்பலாகும் அவன் உள்ளம் ஆம்பல்= water-lily : ஆம்பல் , அல்லி




No comments:

Post a Comment