Friday, August 24, 2012

மனமே-Maname

மனமே 

கண்ணன் திருவடி எண்ணுக மனமே 
திண்ணம் அழியா வண்ணந் தருமே. 

தருமே நிதியும் பெருமை புகழும்
கருமா மேனிப் பெருமா னிங்கே.

இங்கே யமரர் சங்கந் தோன்றும்
மங்குந் தீமை பொங்கும் நலமே.

நலமே நாடிற் புலவீர் பாடீர்
நிலமா மகளின் தலைவன் புகழே.

புகழ்வீர் கண்ணன் தகைசே ரமரர்
தொகையோ டசுரப் பகைதீர்ப் பதையே. 

No comments:

Post a Comment