Saturday, August 25, 2012

கடமை-kadamai

கடமை 

கடமை புரிவா ரின்புறுவார், 
என்னும் பண்டைக் கதைபேணோம்; 

கடமை யறியோம் தொழிலறியோம்;
கட்டென் பதனை வெட்டென்போம்;
மடமை, சிறுமை, துன்பம்பொய்
வருத்தம், நோவு மற்றிவைபோல்
கடமை நினைவுந் தொலைத்திங்கு
களியுற் றென்றும் வாழ்குவமே. 

No comments:

Post a Comment