Monday, July 16, 2012

பேசாப்பொருளைப்பேசநான்துணிந்தேன்

பேசாப்பொருளைப் பேசநான் துணிந்தேன்;
     கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்; 
மண்மீ துள்ள மக்கள், பறவைகள்,  
     விலங்குகள், பூச்சிகள் புற்பூண்டு, மரங்கள்;
யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே,


இன்பமுற்றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே 
     செய்தல் வேண்டும், தேவ, தேவா!
ஞான காசத்து நடுவே நின்றுநான்
    'பூமண்டலத்தில் அன்பும் போரையும் 
விளங்குக!துன்பமும், மிடிமையும், நோவும்.

     சாவும் நீங்கிச் சார்ந்த பல் லுயிரெல்லாம் 
இன்பமுற்று வாழ்க' என்பேன்!இதனை நீ 
     திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி,
'அங்கனே யாகுக'என்பாய் ஐயனே!
     இந்நாள், இப்பொழு தெனக்கிவ் வரத்தினை 
அருள்வாய்;ஆதி மூலமே! அனந்த 
     சக்தி குமாரனே!சந்திர மௌலி!
நித்தியப்பொருளே! சரணம் 
      சரணம் சரணம் சரணமிங் குனக்கே!

No comments:

Post a Comment