Wednesday, July 4, 2012

கண்ணம்மா - என் காதலி-நாணி கண் புதைத்தல்

கண்ணம்மா - என் காதலி 
நாணி கண் புதைத்தல் 


மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை -இவன் 
மருவ நிகழ்ந்ததென்று நாண முற்றதோ?
சின்னஞ் சிறுகுழந்தை யென்ற கருத்தோ?-இங்கு 
செய்யத் தகாத செய்கை செய்தவ  ருண்டோ?
வன்ன முகத்திரையைக் களைந்திடென்றேன்--நின்றன் 
மதங்கண்டு துகிலினை வலிதுரிந்தேன்..
என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்?-எனக் 
கென்னப் படுவதில்லையேடி  கண்ணம்மா!  1


கன் னி வயதுனைக் கண்டதில்லையோ?-கன்னங் 
கன்றிச் சிவக்க முத்த மிட்டதில்லையோ?
அன்னியமாக நம்முள் எண்ணுவதில்லை,-இரண் 
டாவியுமொன் றாகுமென்க் கொண்டதில்லையோ?
பன்னிப் பலவுரைகள் சொல்லுவதேன்னே?-துகில் 
பறித்தவன் கை பறிக்கப் பயங்கொள்வானோ?
என்னைப் புறமெனவுங் கருதுவதோ? கண்கள் 
இரண்டினிலொன்றை யொன்று கண்டு வெள்குமோ? 2

நாட்டினிற் பெண்களுக்கு நாயகர் சொல்லும்-சுவை 
நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ?
பாட்டுஞ்  சுதியு மொன்று கலந்திடுங்கால் -தம்முட் 
பன்னி யுபசரணை பேசுவதுண்டோ?
நீட்டுங் கதிரகளோடு நிலவுவந்தே --விண்ணை 
நின்று புகழ்ந்துவிட்டு பின்மருவுமோ?
முட்டும் விறகினையச்சோதிகவ்வுங்கால்--அவை 
முன்னுப சாரவகை மொழிந்துடுமோ? 3

சாத்திரக்காரரிடம் கேட்டுவந் திட்டேன்;-அவர் 
சாத்திரம் சொல்லியதை நினைக்குரைப்பேன்;
நேற்று முன்னாளில் வந்த உறவன்றடீ;-மிக 
நெடும் பண்டைக் காலமுதல் நேர்ந்து வந்ததாம் 
போற்றுமி ராமனேன முன்புதித்தனை,-அங்கு 
பொன்மிதி லைக்கரசன் பூமடந்தைநான்;
ஊற்றமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டான் கண்ணன் 4 


உருவ நினைக்கமையப் பார்த்த னங்குநான் 
முன்னை மிகப்பழமை யிரணியனாம்-எந்தை 
மூர்க்கந் தவிர்க்க வந்த நரசிங்க னீ,
பின்னையொர்   புத்தனேன நான்வளர்ந்திட்டேன்--ஒளிப் 
பெண்மை அசோதரையென்றுன்னை யெய்தினேன்.
சொன்னவரு சாத்திரத்தில் மிக வல்லவர்காண்; அவர் 
சொல்லிற் பழுதிருக்க காரணமில்லை;
இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம்;-இதில் 
எதுக்கு நாணமுற்று கண்புதைப்பதே?

No comments:

Post a Comment