Thursday, December 13, 2012

பராசக்தி,வாணி,ஸ்ரீ தேவி,பார்வதி


பராசக்தி

(மூன்றும் ஒன்றாகிய மூர்த்தி)

மாதா பராசக்தி வையம்எலாம் நீ நிறைந்தாய் !
ஆதாரம் உன்னை அல்லாமல் ஆரெமக்குப் பாரினிலே !
ஏதா யினும்வழிநீ சொல்வாய் எமது உயிரே !
வேதாவின் தாயே ! மிகப் பணிந்து வாழ்வோமே

வாணி

வாணி கலைத் தெய்வம் மணிவாக்கு உதவிடுவாள்
ஆணி முத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாம் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே

ஸ்ரீ தேவி

பொன்னரசி நாரணனார் தேவி, புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல் மேனி அழகுடையாள்,
அன்னையவள் வையம்எலாம் ஆதரிப்பாள், ஸ்ரீதேவி
தன்னிரு பொன்தாளே சரண்புகுந்து வாழ்வோமே

பார்வதி

மலையிலே தான் பிறந்தாள் சங்கரனை மாலையிட்டாள்
உலையிலே ஊதி உலகக் கனல்வளர்ப்பாள்
நிலையில் உயர்த்திடுவாள், நேரே அவள் பாதம்
தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே

No comments:

Post a Comment