Thursday, December 13, 2012

இந்தத் தெய்வம் நமக்கநுகூலம்


இந்தத் தெய்வம் நமக்கநுகூலம்
இனிமனக் கவலைக் கிடமில்லை

மந்திரங்களைச் சோதனை செய்தால்
வையகத்தினை ஆள்வது தெய்வம்
இந்தத் தெய்வம் கதிஎன்றிருப்பீர்
ஆக்கம் உண்டென் றனைத்தும் உரைக்கும்

மரத்தின் வேரில் அதற்குணவுண்டு
வயிற்றினிலே கருவுக் குணவுண்டு
தரத்தில் ஒத்த தருமங் களுண்டு
சக்தி என்றிலோ முக்தியுண்டு

உலகமே உடலாய் அதற்குள்ளே
உயிரதாகி விளங்கிடும் தெய்வம்
இலகும் வானொளி போல் அறிவாகி
எங்கணும் பரந்திடும் தெய்வம்

செய்கை யாவும் தெய்வத்தின் செய்கை
சிந்தை யாவும் தெய்வத்தின் சிந்தை
உய்கை கொண்டதன் நாமத்தைக் கூறின்
உணர்வு கொண்டவர் தேவர்கள் ஆவர்

நோயில்லை வறுமையில்லை
நோன்புஇழைப் பதிலே துன்பமில்லை
தாயும் தந்தையும் தோழனுமாகித்
தகுதியும் பயனும் தரும் தெய்வம்

அச்சமில்லை மயங்குவதில்லை
அன்பும் இன்பமும் மேம்மையும் உண்டு
மிச்சமில்லை பழந்துயர் குப்பை
வெற்றியுண்டு விரைவினில் உண்டு

இந்தத் தெய்வம் நமக்கநுகூலம்
இனி மனக்கவலைக் கிடமில்லை

No comments:

Post a Comment