தொழில்
1.இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!
யந்தி ரங்கள் வகுத்திடு வீரே!
கரும்பைச் சாறு பிழிந்துடு வீரே!
கடலில் மூழ்கி முத்தெடுப் பீரே!
அரும்பும வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயி ரந் தொழில் செய்திடு வீரே!
பெரும்பு கழ்நுமக் கேயிசைக் கின்றேன்
பிரம தேவன் கலையிங்கு நீரே
2.மன்நெ டுத்துக் குடங்கள் செய்வீரே!
மரத்தை வெட்டி மனைசெய கு வீரே!
உன்னக் காய்கனி தந்திடவீரே!
உழுது நஞ்சைப் பயிரிடுவீரே!
என்னை, பால்நெய் கொணர்ந்திடு வீரே!
இழையை நூற்று நல் லாடை செய் வீரே!
விண்ணி னின் ரெமை வானவர் காப்பர்;
மேவிப் பார்மிசை காப்பவர் நீரே!
3.பாட்டுஞ் செய்யுளுங் கோத்திடு வீரே!
பரதநாட்டியக் கூத்திடு வீரே!
காட்டும் வையப் பொருள்களின் உண்மை
கண்டு சாத்திரம் சேர்த்திடு வீரே!
நாட்டி லேயறம் கூட்டிவைப் பீரே!
நாடும் இன்பங்கள் ஊட்டி வைப் பீரே!
தேட்ட மின்றி விழியெதிர் காணும்
தெய்வமாக விளங்குவீர் நீரே!
1.இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!
யந்தி ரங்கள் வகுத்திடு வீரே!
கரும்பைச் சாறு பிழிந்துடு வீரே!
கடலில் மூழ்கி முத்தெடுப் பீரே!
அரும்பும வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயி ரந் தொழில் செய்திடு வீரே!
பெரும்பு கழ்நுமக் கேயிசைக் கின்றேன்
பிரம தேவன் கலையிங்கு நீரே
2.மன்நெ டுத்துக் குடங்கள் செய்வீரே!
மரத்தை வெட்டி மனைசெய கு வீரே!
உன்னக் காய்கனி தந்திடவீரே!
உழுது நஞ்சைப் பயிரிடுவீரே!
என்னை, பால்நெய் கொணர்ந்திடு வீரே!
இழையை நூற்று நல் லாடை செய் வீரே!
விண்ணி னின் ரெமை வானவர் காப்பர்;
மேவிப் பார்மிசை காப்பவர் நீரே!
3.பாட்டுஞ் செய்யுளுங் கோத்திடு வீரே!
பரதநாட்டியக் கூத்திடு வீரே!
காட்டும் வையப் பொருள்களின் உண்மை
கண்டு சாத்திரம் சேர்த்திடு வீரே!
நாட்டி லேயறம் கூட்டிவைப் பீரே!
நாடும் இன்பங்கள் ஊட்டி வைப் பீரே!
தேட்ட மின்றி விழியெதிர் காணும்
தெய்வமாக விளங்குவீர் நீரே!
No comments:
Post a Comment