லக்ஷ்மி காதல்
இந்த நிலையினிலே, அங்கொர்
இன்பப் பொழிலினிடையினில் வேறொரு
சுந்தரி வந்து நின்றாள் -அவள்
சோதி முகத்தின் அழகினைக் கண்டெனதன்
சிந்தை திறைகொடுத்தேன்--அவள்
செந்திருவென்று பெயர்சொல்லி னாள் -மற்றும்
அந்த தினமுதலா-நெஞ்சம்
ஆரத்தழுவ வேண்டுகின் றேன்,, அம்மா1.
புன்னகை செய்திடுவாள்--அற்றைப்
போது முழுதும் மகிழ்ந்திருப்பேன்;சற்றேன
முன்னின்று பார்த்திடுவாள்--அந்த
மோகத்திலே தலை சுற்றிடுங் காண்-பின்னர்
என்ன பிழைகள் கண்டோ-அவள்
என்னைப் புறக்கணித் தேகிடு வாள்; அங்கு
சின்னமும் பின்னமுமா--மனஞ்
சிந்தி யுளமிக நைந்திடுவேன்,, அம்மா 2
காட்டுவழிகளிலே -மலைக்
காட்சியிலே,, புனல் வீழ்ச்சியிலே,பல
நாட்டுப் புறங்களிலே-நகர்
நண்ணு சிலசுடர் மாடத்தி லே, சில
வேட்டுவர் சார்பினிலே--சில
வீரரிடத்திலும் வேந்த ரித்திலும்,
மீட்டு மவள்வருவாள்--கண்ட
விந்தை யிலேயின்ப மேற்கொண்டுபோம். அம்மா
இந்த நிலையினிலே, அங்கொர்
இன்பப் பொழிலினிடையினில் வேறொரு
சுந்தரி வந்து நின்றாள் -அவள்
சோதி முகத்தின் அழகினைக் கண்டெனதன்
சிந்தை திறைகொடுத்தேன்--அவள்
செந்திருவென்று பெயர்சொல்லி னாள் -மற்றும்
அந்த தினமுதலா-நெஞ்சம்
ஆரத்தழுவ வேண்டுகின் றேன்,, அம்மா1.
புன்னகை செய்திடுவாள்--அற்றைப்
போது முழுதும் மகிழ்ந்திருப்பேன்;சற்றேன
முன்னின்று பார்த்திடுவாள்--அந்த
மோகத்திலே தலை சுற்றிடுங் காண்-பின்னர்
என்ன பிழைகள் கண்டோ-அவள்
என்னைப் புறக்கணித் தேகிடு வாள்; அங்கு
சின்னமும் பின்னமுமா--மனஞ்
சிந்தி யுளமிக நைந்திடுவேன்,, அம்மா 2
காட்டுவழிகளிலே -மலைக்
காட்சியிலே,, புனல் வீழ்ச்சியிலே,பல
நாட்டுப் புறங்களிலே-நகர்
நண்ணு சிலசுடர் மாடத்தி லே, சில
வேட்டுவர் சார்பினிலே--சில
வீரரிடத்திலும் வேந்த ரித்திலும்,
மீட்டு மவள்வருவாள்--கண்ட
விந்தை யிலேயின்ப மேற்கொண்டுபோம். அம்மா
No comments:
Post a Comment