பிழைத்த தென்னந்தோப்பு
1.வயலிடை யினிலே - செழுநீர் மடுக் கரையினிலே
அயலொருவருமில்லை,-தனியே ஆறுதல் கொள்ளவந்தேன்
2.காற்றடித்ததிலே,-மரங்கள் கணக்கிடத்தகுமோ?
நாற்றினைப் போலே -சிதறி நாடெங்கும் வீழ்ந்தனவே.
3.சிறிய திட்டையிலே-உளதோர் தென்னஞ் சிறியதோப்பு
வரியவனுடமை -அதனை வாயு பொடிக்கவில்லை
4.வீழ்ந்தன சிலவாம்-மீந்தன பலவாம்;
வாழ்ந்திருக்கவென்றே -அதனை வாயு பொறுத்துவிடான்
5.தனிமை கண்டதுண்டு;-அதிலே சாரமிருக்குதம்மா!
பனிதொலைக்கும் வெயில்,-அது தேம் பாகு மதுர மன்றோ ?
6.இரவி நின்றதுகாண்-விண்ணிலே இன்ப வொளித்திரளாய்;
பரவி எங்கணுமே - கதிர்கள் பாடிக்களித்தனவே .
7.நின்ற மரத்திடையே -சிறிதோர் நிழ்லினி ருந்தேன்.
என்றுங் கவிதையிலே - நிலையம் இன்ப மறிந்துகொண்டேன்.
8.வாழ்க பராசக்தீ! -நினையே வாழ்த்திடுவோர் வாழ்வார்;
வாழ்க பரசக்தீ!-இதையென் வாக்கு மறவாதே!
1.வயலிடை யினிலே - செழுநீர் மடுக் கரையினிலே
அயலொருவருமில்லை,-தனியே ஆறுதல் கொள்ளவந்தேன்
2.காற்றடித்ததிலே,-மரங்கள் கணக்கிடத்தகுமோ?
நாற்றினைப் போலே -சிதறி நாடெங்கும் வீழ்ந்தனவே.
3.சிறிய திட்டையிலே-உளதோர் தென்னஞ் சிறியதோப்பு
வரியவனுடமை -அதனை வாயு பொடிக்கவில்லை
4.வீழ்ந்தன சிலவாம்-மீந்தன பலவாம்;
வாழ்ந்திருக்கவென்றே -அதனை வாயு பொறுத்துவிடான்
5.தனிமை கண்டதுண்டு;-அதிலே சாரமிருக்குதம்மா!
பனிதொலைக்கும் வெயில்,-அது தேம் பாகு மதுர மன்றோ ?
6.இரவி நின்றதுகாண்-விண்ணிலே இன்ப வொளித்திரளாய்;
பரவி எங்கணுமே - கதிர்கள் பாடிக்களித்தனவே .
7.நின்ற மரத்திடையே -சிறிதோர் நிழ்லினி ருந்தேன்.
என்றுங் கவிதையிலே - நிலையம் இன்ப மறிந்துகொண்டேன்.
8.வாழ்க பராசக்தீ! -நினையே வாழ்த்திடுவோர் வாழ்வார்;
வாழ்க பரசக்தீ!-இதையென் வாக்கு மறவாதே!
No comments:
Post a Comment