சரஸ்வதி காதல்
பிள்ளைப் பிராயத்திலே--அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டே னங்கு
பள்ளிப் படிப்பினிலே--மதி
பற்றிடவில்லை யெநிலுந் தனிப்பட
வெள்ளை மலரணைமேல் -அவள்
வீணையுங் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருள முதும்-கண்டேன்
வெள்ளை மனது பறிகொடுத் தேன் அம்மா!1.
ஆடி வருகையிலே -அவள்
அங்கொரு வீதி முனையில் நிற்பாள்;கையில்
ஏடு தரித்திருப்பாள்-அதில்
இங்கிதமாக பதம் படிப்பாள் ,அதை
நாடி அருகணைந்தால்-பல
ஞானங்கள் சொல்லி இனிமைசெய்வாள்."இன்று
கூடி மகிழ்வ"மென்றால்-விழிக்
கோணத்தி லேநகை காட்டிச் செல்வாள்,, அம்மா2.
ஆற்றங் கரைதனிலே-தனி
யானதோர் மண்டப மீதினிலே,, தென்றற்
காற்றை நுகர்திருந்தேன்--அங்கு
கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள் ;அதை
ஏற்று மகிழ்ந்தே--'அடி
என்னோடிணங்கி மணம்புரிவாய்''என்று
போற்றிய போதினிலே-இளம்
புன்னகை பூத்து மறைந்த்விட்டாள் , அம்மா!3
சித்தந் தளர்ந்ததுண்டோ?-கலைத்
தேவியின்மீது விருப்பம் வளர்ந்தொரு
பித்துப் பிடித்ததுபோல்--பகற்
பேச்சும் இரவிற் கனவும் அவளிடை
வைத்த நினைவை யல்லால்-பிற
வாஞ் சையுண்டோ? வய தங்ஙன மேயிரு
பத்திரண் டாமளவும்-வெள்ளைப்
பண்மகள் காதலைப் பற்றி நின்றேன்,, அம்மா!4
பிள்ளைப் பிராயத்திலே--அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டே னங்கு
பள்ளிப் படிப்பினிலே--மதி
பற்றிடவில்லை யெநிலுந் தனிப்பட
வெள்ளை மலரணைமேல் -அவள்
வீணையுங் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருள முதும்-கண்டேன்
வெள்ளை மனது பறிகொடுத் தேன் அம்மா!1.
ஆடி வருகையிலே -அவள்
அங்கொரு வீதி முனையில் நிற்பாள்;கையில்
ஏடு தரித்திருப்பாள்-அதில்
இங்கிதமாக பதம் படிப்பாள் ,அதை
நாடி அருகணைந்தால்-பல
ஞானங்கள் சொல்லி இனிமைசெய்வாள்."இன்று
கூடி மகிழ்வ"மென்றால்-விழிக்
கோணத்தி லேநகை காட்டிச் செல்வாள்,, அம்மா2.
ஆற்றங் கரைதனிலே-தனி
யானதோர் மண்டப மீதினிலே,, தென்றற்
காற்றை நுகர்திருந்தேன்--அங்கு
கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள் ;அதை
ஏற்று மகிழ்ந்தே--'அடி
என்னோடிணங்கி மணம்புரிவாய்''என்று
போற்றிய போதினிலே-இளம்
புன்னகை பூத்து மறைந்த்விட்டாள் , அம்மா!3
சித்தந் தளர்ந்ததுண்டோ?-கலைத்
தேவியின்மீது விருப்பம் வளர்ந்தொரு
பித்துப் பிடித்ததுபோல்--பகற்
பேச்சும் இரவிற் கனவும் அவளிடை
வைத்த நினைவை யல்லால்-பிற
வாஞ் சையுண்டோ? வய தங்ஙன மேயிரு
பத்திரண் டாமளவும்-வெள்ளைப்
பண்மகள் காதலைப் பற்றி நின்றேன்,, அம்மா!4
No comments:
Post a Comment