கண்ணம்மா - என் காதலி
நாணி கண் புதைத்தல்
மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை -இவன்
மருவ நிகழ்ந்ததென்று நாண முற்றதோ?
சின்னஞ் சிறுகுழந்தை யென்ற கருத்தோ?-இங்கு
செய்யத் தகாத செய்கை செய்தவ ருண்டோ?
வன்ன முகத்திரையைக் களைந்திடென்றேன்--நின்றன்
மதங்கண்டு துகிலினை வலிதுரிந்தேன்..
என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்?-எனக்
கென்னப் படுவதில்லையேடி கண்ணம்மா! 1
கன் னி வயதுனைக் கண்டதில்லையோ?-கன்னங்
கன்றிச் சிவக்க முத்த மிட்டதில்லையோ?
அன்னியமாக நம்முள் எண்ணுவதில்லை,-இரண்
டாவியுமொன் றாகுமென்க் கொண்டதில்லையோ?
பன்னிப் பலவுரைகள் சொல்லுவதேன்னே?-துகில்
பறித்தவன் கை பறிக்கப் பயங்கொள்வானோ?
என்னைப் புறமெனவுங் கருதுவதோ? கண்கள்
இரண்டினிலொன்றை யொன்று கண்டு வெள்குமோ? 2
நாட்டினிற் பெண்களுக்கு நாயகர் சொல்லும்-சுவை
நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ?
பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால் -தம்முட்
பன்னி யுபசரணை பேசுவதுண்டோ?
நீட்டுங் கதிரகளோடு நிலவுவந்தே --விண்ணை
நின்று புகழ்ந்துவிட்டு பின்மருவுமோ?
முட்டும் விறகினையச்சோதிகவ்வுங்கால்--அவை
முன்னுப சாரவகை மொழிந்துடுமோ? 3
சாத்திரக்காரரிடம் கேட்டுவந் திட்டேன்;-அவர்
சாத்திரம் சொல்லியதை நினைக்குரைப்பேன்;
நேற்று முன்னாளில் வந்த உறவன்றடீ;-மிக
நெடும் பண்டைக் காலமுதல் நேர்ந்து வந்ததாம்
போற்றுமி ராமனேன முன்புதித்தனை,-அங்கு
பொன்மிதி லைக்கரசன் பூமடந்தைநான்;
ஊற்றமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டான் கண்ணன் 4
உருவ நினைக்கமையப் பார்த்த னங்குநான்
முன்னை மிகப்பழமை யிரணியனாம்-எந்தை
மூர்க்கந் தவிர்க்க வந்த நரசிங்க னீ,
பின்னையொர் புத்தனேன நான்வளர்ந்திட்டேன்--ஒளிப்
பெண்மை அசோதரையென்றுன்னை யெய்தினேன்.
சொன்னவரு சாத்திரத்தில் மிக வல்லவர்காண்; அவர்
சொல்லிற் பழுதிருக்க காரணமில்லை;
இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம்;-இதில்
எதுக்கு நாணமுற்று கண்புதைப்பதே?
நாணி கண் புதைத்தல்
மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை -இவன்
மருவ நிகழ்ந்ததென்று நாண முற்றதோ?
சின்னஞ் சிறுகுழந்தை யென்ற கருத்தோ?-இங்கு
செய்யத் தகாத செய்கை செய்தவ ருண்டோ?
வன்ன முகத்திரையைக் களைந்திடென்றேன்--நின்றன்
மதங்கண்டு துகிலினை வலிதுரிந்தேன்..
என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்?-எனக்
கென்னப் படுவதில்லையேடி கண்ணம்மா! 1
கன் னி வயதுனைக் கண்டதில்லையோ?-கன்னங்
கன்றிச் சிவக்க முத்த மிட்டதில்லையோ?
அன்னியமாக நம்முள் எண்ணுவதில்லை,-இரண்
டாவியுமொன் றாகுமென்க் கொண்டதில்லையோ?
பன்னிப் பலவுரைகள் சொல்லுவதேன்னே?-துகில்
பறித்தவன் கை பறிக்கப் பயங்கொள்வானோ?
என்னைப் புறமெனவுங் கருதுவதோ? கண்கள்
இரண்டினிலொன்றை யொன்று கண்டு வெள்குமோ? 2
நாட்டினிற் பெண்களுக்கு நாயகர் சொல்லும்-சுவை
நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ?
பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால் -தம்முட்
பன்னி யுபசரணை பேசுவதுண்டோ?
நீட்டுங் கதிரகளோடு நிலவுவந்தே --விண்ணை
நின்று புகழ்ந்துவிட்டு பின்மருவுமோ?
முட்டும் விறகினையச்சோதிகவ்வுங்கால்--அவை
முன்னுப சாரவகை மொழிந்துடுமோ? 3
சாத்திரக்காரரிடம் கேட்டுவந் திட்டேன்;-அவர்
சாத்திரம் சொல்லியதை நினைக்குரைப்பேன்;
நேற்று முன்னாளில் வந்த உறவன்றடீ;-மிக
நெடும் பண்டைக் காலமுதல் நேர்ந்து வந்ததாம்
போற்றுமி ராமனேன முன்புதித்தனை,-அங்கு
பொன்மிதி லைக்கரசன் பூமடந்தைநான்;
ஊற்றமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டான் கண்ணன் 4
உருவ நினைக்கமையப் பார்த்த னங்குநான்
முன்னை மிகப்பழமை யிரணியனாம்-எந்தை
மூர்க்கந் தவிர்க்க வந்த நரசிங்க னீ,
பின்னையொர் புத்தனேன நான்வளர்ந்திட்டேன்--ஒளிப்
பெண்மை அசோதரையென்றுன்னை யெய்தினேன்.
சொன்னவரு சாத்திரத்தில் மிக வல்லவர்காண்; அவர்
சொல்லிற் பழுதிருக்க காரணமில்லை;
இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம்;-இதில்
எதுக்கு நாணமுற்று கண்புதைப்பதே?
No comments:
Post a Comment