Saturday, September 29, 2012

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே-Vetri ettuth thikkumetta kottu murase


முரசு 

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! 
வேதம் என்றும் வாழ்கஎன்று கொட்டு முரசே! 
நெற்றி யொற்றைக் கண்ணானோடே நிர்த்தனம் செய்தாள் 
நித்த சக்தி வாழ்க வென்று கொட்டு முரசே! 

ஊருக்கு நல்லது சொல்வேன் - என்க் 
குண்மை தெரிந்தது சொல்வேன் 
சீருக் கெல்லாம் முதலாகும் - ஒரு 
தெய்வம் துணைசெய்ய வேண்டும் 

வேத மறிந்தவன் பார்ப்பான், பல 
வித்தை தெரிந்தவன் பார்ப்பான் 
நீதி நிலைத்தவ றாமல் - தண்ட 
நெமங்கள் செய்பவன் நாய்க்கன் 

பண்டங்கள் விற்பவன் செட்டி - பிறை 
பட்டினி தீர்ப்பவன் செட்டி 
தொண்டரென் றோர்வகுப் பில்லை - தொழில் 
சோம்பலைப் போல்இழி வில்லை 

நாலு வகுப்புமிங் கொன்றே - இந்த 
நான்கினில் ஒன்று குறைந்தால் 
வேலை தவறிச் சிதைந்தே - செத்து 
வீழ்ந்திடும் மானிடச் சாதி 

ஒற்றைக் குடும்பந் தனிலே - பொருள் 
ஓங்க வளர்ப்பவன் தந்தை 
மற்றை கருமங்கள் செய்தே - மனை 
வாழ்ந்திடச் செய்பவள் அன்னை 

ஏவல்கள் செய்பவள் மக்கள்! - இவர் 
யாவரும் ஓர்குலம் அன்றோ? 
மேவி அனைவரும் ஒன்றாய் - நல்ல 
வீடு நடத்துதல் கண்டோம் 

சாதிப் பிரிவுகள் சொல்லி - அன்பு 
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார் 
நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு 
நித்தமும் சண்டைகள் செய்வார் 

சாதிப் கொடுமைகள் வேண்டாம் - அன்பு 
தன்னில் செழித்திடும் வையம் 
ஆதர வுற்றிங்கு வாழ்வோம் - தொழில் 
ஆயிரம் மாண்புறச் செய்வோம் 

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி 
பேணி வளர்த்திடும் ஈசன் 
மண்ணுக் குள்ளே சிலமூடர் - நல்ல 
மாத ரறிவைக் கெடுத்தார் 

கண்கள் இரண்டில் ஒன்றைக் - குத்திக் 
காட்சி கெடுத்திட லாமோ? 
பெண்க ளறிவை வளர்த்தால் - வையம் 
பேதைமை யற்றிடுங் காணீர் 

No comments:

Post a Comment