Saturday, September 29, 2012

உடன்பிறந் தார்களைப் போலே-Udanpirantharkalaipola


உடன்பிறந் தார்களைப் போலே - இவ் 
வுலகில் மனிதரெல் லாரும் 
இடம்பெரி துண்டுவை யத்தில் - இதில் 
ஏதுக்கு சண்டைகள் செய்வீர்? 

மரத்தினை நட்டவன் தண்ணீர் - நஙு 
வார்த்ததை ஓங்கிடச் செய்வான் 
சிரத்தை யுடையது தெய்வம் - இங்கு 
சேர்த்த உணவெல்லை யில்லை 

வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்! - இங்கு 
வாழும் மனிதரெல் லோருக்கும் 
பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்! - பிறை 
பங்கைத் திருடுதல் வேண்டாம் 

உடன்பிறந் தவர்களைப் போலே - இவ் 
வுலகினில் மனிதரெல் லாரும் 
திடங்கொண் டவர்மெலிந் தோரை - இங்குத் 
தின்று பிழைத்திட லாமோ? 

வலிமை யுடையது தெய்வம் - நம்மை 
வாழ்ந்திடச் செய்வது தெய்வம் 
மெலிவுகண் டாலும் குழந்தை - தன்னை 
வீழ்த்தி மிதத்திட லாமோ? 

தம்பி சற்றே மெலிவானால் - அண்ணன் 
தனடிமை கொள்ள லாமோ? 
செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி - மக்கள் 
சிற்றடி மைப்பட லாமோ? 

அன்பென்று கொட்டு முரசே! - அதில் 
யார்க்கும் விடுதலை உண்டு 
பின்பு மனிதர்க ளெல்லாம் - கல்வி 
பெற்றுப் பதம்பெற்று வாழ்வார் 

அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள் 
அத்தன பேருக்கும் ஒன்றாய் 
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு 
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும் 

பாருக்குள்ளே சமத்தன்மை - தொடர் 
பற்றுஞ் சகோதரத் தன்மை 
யாருக்கும் தீமைசெய் யாது - புவி 
யெங்கும் விடுதலை செய்யும் 

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு 
வாழும் மனிதருக் கெல்லாம் 
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப் 
பாரை உயர்த்திட வேண்டும் 

ஒன்றென்று கொட்டு முரசே! - அன்பில் 
ஓங்கென்று கொட்டு முரசே ! 
நன்றென்று கொட்டு முரசே! இந்த 
நானில் மாந்தருக் கெல்லாம் 


No comments:

Post a Comment