Sunday, November 25, 2012

வேய்ங்குழல்

வேய்ங்குழல் 

எங்கிருந்து வருகுவதோ?-ஒலி 
யாவர் செய்குவதோ?-அடி தோழி!
1)
குன்றினின்றும் வருகுவதோ?-மரக் 
கொம்பினின்றும் வருகுவதோ?-வெளி 
மன்றினின்று வருகுவதோ?-என்றன் 
மதிமருண்டிடச் செய்குதடி!-இஃது (எங்கிருந்து)
2)

அலையொலித்திடும் தெய்வ -யமுனை
யாற்றினின்றும் ஒலிப்பதுவோ?-அன்றி
இலையொலிக்கும் பொழிலிடை நின்றும்
எழுவதோ இஃதின்னமுதைப்போல்?(எங்கிருந்து)
3)
காட்டினின்றும் வருகுவதோ? -நிலாக்
காற்றைக் கொண்டு தருகுவதோ?-வெளி
நாட்டினின்றுமித் தென்றல் கொணர்வதோ?
நாதமிஃதென் உயிரையுருக்குதே!(எங்கிருந்து)
4)
பறவை யேதுமொன்றுள்ளதுவோ!-இங்ஙன்
பாடுமோ அமுதக் கனற்பாட்டு?
மறைவினின்றுங் கின்னரராதியர்
வாத்தியத்தினிசை யிதுவோ அடி!(எங்கிருந்து)
5)
கண்ணனூதிடும் வேய்ங்குழல் தானடி!
காதிலேயமு துள்ளத்தில் நஞ்சு ,
பண்ணன்றாமடி பாவையர்வாடப்
யெய்திடும் அம்படி தோழி!(எங்கிருந்து)

No comments:

Post a Comment