முருகக் கடவுள் மீது கிளித் தூது-முருகக்கடவுள் கிளி தூது
சொல்ல வல்லாயோ? - கிளியே
சொல்லநீ வல்லாயோ?
வல்லவேல் முருகன் - தனையிங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று (சொல்ல)
தில்லை யம்பலத்தே - நடனம்
செய்யும் அமரர்பிரான் - அவன்
செல்வத் திருமகனை - இங்கு வந்து
சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று (சொல்ல)
அல்லிக் குளத்தருகே - ஒரு நாள்
அந்திப் பொழுதினிலே - அங்கொர்
முல்லைச் செடியதன்பாற் - செய்த வினை
முற்று மறந்திடக் கற்றதென் னேயென்று (சொல்ல)
பாலை வனத்திடையே - தனைக்கைப்
பற்றி நடக்கையிலே - தன் கை
வேலின் மிசையாணை - வைத்துச் சொன்ன
விந்தை மொழிகளைச் சிந்தைசெய்வா யென்று (சொல்ல
No comments:
Post a Comment