Saturday, September 1, 2012

முருகக் கடவுள் மீது கிளித் தூது-முருகக்கடவுள் கிளி தூது


முருகக் கடவுள் மீது கிளித் தூது-முருகக்கடவுள் கிளி தூது  

சொல்ல வல்லாயோ? - கிளியே 
சொல்லநீ வல்லாயோ? 

வல்லவேல் முருகன் - தனையிங்கு 
வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று (சொல்ல) 

தில்லை யம்பலத்தே - நடனம் 
செய்யும் அமரர்பிரான் - அவன் 
செல்வத் திருமகனை - இங்கு வந்து 
சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று (சொல்ல) 

அல்லிக் குளத்தருகே - ஒரு நாள் 
அந்திப் பொழுதினிலே - அங்கொர் 
முல்லைச் செடியதன்பாற் - செய்த வினை 
முற்று மறந்திடக் கற்றதென் னேயென்று (சொல்ல) 

பாலை வனத்திடையே - தனைக்கைப் 
பற்றி நடக்கையிலே - தன் கை 
வேலின் மிசையாணை - வைத்துச் சொன்ன 
விந்தை மொழிகளைச் சிந்தைசெய்வா யென்று (சொல்ல

No comments:

Post a Comment